Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு; அமைச்சர் தங்கமணி

மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு; அமைச்சர் தங்கமணி

By: Monisha Thu, 26 Nov 2020 2:28:59 PM

மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு; அமைச்சர் தங்கமணி

இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது.

கடந்த சில நாட்களாக சென்னையில் மழை பெய்து வருகிற நிலையில், சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

minister,thangamani,rainwater,electricity,nivar storm ,அமைச்சர்,தங்கமணி,மழை நீர்,மின்விநியோகம்,நிவர் புயல்

புயல் காரணமாக சென்னையில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மின் விநியோகம் குறித்து பேசியுள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும். மழை நீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :