Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா தயாரித்துள்ள விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி……மந்திரி தோமர் அறிமுகம்

இந்தியா தயாரித்துள்ள விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி……மந்திரி தோமர் அறிமுகம்

By: vaithegi Fri, 10 June 2022 07:20:30 AM

இந்தியா தயாரித்துள்ள விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி……மந்திரி தோமர் அறிமுகம்

டெல்லி: தற்போது வரையில் புலிகள், சிங்கங்கள், கொரில்லாக்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் ஆகியவற்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்தும் வருகின்றன. இந்நிலையில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசி இந்தியா தயாரித்துள்ளது.

நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்கள் தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்த ஹரியானாவைச் சேர்ந்த ஐ.சி.ஏ.ஆர். தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விலங்குகளுக்கு செலுத்தக் கூடிய அனோகோவாக்ஸ் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

delta,omigron,omigron,anokovax ,டெல்டா, ஓமிக்ரான்,ஓமிக்ரான், அனோகோவாக்ஸ்

அனோகோவாக்ஸால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது என்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் முயல்களை பாதுகாக்கும். இதனை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், விலங்குகளுக்காக இந்தியா தயாரித்துள்ள முதல் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த தடுப்பூசி விலங்குகளை தாக்கும் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வைரஸ்களை கட்டுப்படுத்துகிறது.

இந்திய விஞ்ஞானிகளின் அயராத முயற்சியினால் சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்திய தன்னிறைவு பெற்றுள்ளது.

Tags :
|