Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு .. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு .. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

By: vaithegi Wed, 11 Oct 2023 3:38:24 PM

உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு ..  அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விரைவில் விண்ணப்பிக்கலாம் ..தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 1.70 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனால் அதில் 1.06 பேருக்கு மட்டுமே தகுதி அடிப்படையில் உரிமைத்தொகையான ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களில் தகுதி இருந்தும் உரிமைத்தொகை வழங்கப்படாதவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய அரசு தரப்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

entitlement,ministerial udayanidhi,reinstatement ,உரிமைத்தொகை, அமைச்சர் உதயநிதி,மறுவாய்ப்பு


இதனை அடுத்து அதில் பலர் விண்ணப்பித்து வரும் நிலையில், அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும்,

விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags :