Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்களுக்கு லாலிபாப் வழங்க நிதி ஒதுக்கீடு செய்த கல்வி அமைச்சரை பதவி காலி

மாணவர்களுக்கு லாலிபாப் வழங்க நிதி ஒதுக்கீடு செய்த கல்வி அமைச்சரை பதவி காலி

By: Nagaraj Sun, 07 June 2020 11:04:54 AM

மாணவர்களுக்கு லாலிபாப் வழங்க நிதி ஒதுக்கீடு செய்த கல்வி அமைச்சரை பதவி காலி

கொரோனா தொடர்பான கசப்பான சம்பவங்களை மறக்க மாணவர்களுக்கு மிட்டாய் (லாலிபாப்) வாங்கித்தர நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்த மடகாஸ்கர் அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளில் வைரஸ் தொற்று கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்காக இப்பகுதிகளில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற மூலிகை மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

minister,confectionery,fund allocation,dismissal,madagascar ,அமைச்சர், மிட்டாய், நிதி ஒதுக்கீடு, பதவி நீக்கம், மடகாஸ்கர்

இந்நிலையில் மடகாஸ்கர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர், பள்ளியில் மாணவர்கள் சாப்பிடும் கொரோனா மருந்தின் கசப்பான தன்மையையும், அது குறித்த சம்பவங்களையும் மறக்க அவர்களுக்கு மிட்டாய் (லாலிபாப்) வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கடும் எதிர்ப்புத் தெரிவித்து ரிஜாசோவோவை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

Tags :