Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டொரு நாட்களில் பணிக்கு திரும்புவேன் ....மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு தெரிவிப்பு

இரண்டொரு நாட்களில் பணிக்கு திரும்புவேன் ....மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு தெரிவிப்பு

By: vaithegi Mon, 20 June 2022 6:39:04 PM

இரண்டொரு நாட்களில் பணிக்கு திரும்புவேன் ....மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு தெரிவிப்பு

தமிழகம் :தொடர்ச்சியான பணிகள் மட்டும் தட்பவெப்ப நிலை மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை (21-6-2022) திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன், நேற்று (19-6-2022வி.பி.ராமன் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இயலாத நிலையில், என்னுடைய சார்பில் உரையினை பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படித்தார்.

உங்களில் ஒருவனான என் மீது அன்புகொண்ட உடன்பிறப்புகளும், தோழமை இயக்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும், பல துறைகளைச் சேர்ந்தவர்களும் பதற்றத்துடன் உடல்நலன் குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். என் மீதான அவர்களின் அன்புதான் அந்தப் பதற்றத்திற்கான காரணம் என்பதை நான் அறிவேன்.

எனினும், பதற்றப்பட வேண்டிய அளவில் எதுவும் இல்லை. இலேசான காய்ச்சல் என்பதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி அதற்குரிய மருந்துகளுடன், கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டியதாகிவிட்டது.இன்றும் நாளையும் சற்று ஓய்வெடுக்கும் எனக்கு வாய்ப்பு அமைந்தால் அதன்பின் எப்போதும் போல பணியினைத் தொடர்ந்திட முடியும். நான் நலமாகவே இருக்கிறேன். பணிகளைத் தொடர்ந்திடுவேன்.

சரியாகச் சொல்வதென்றால், ஓய்விலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொண்டுதான் வருகிறேன். நேற்றிரவு சென்னையில் பெய்த திடீர் மழையால், எந்த இடத்திலாவது தண்ணீர் தேங்கியுள்ளதா, வடிகால் அமைப்பு பணிகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து அதிகாலையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசித்து விவரங்களைத் தெரிந்து கொண்டேன்.

fever,mk stalin,dmk volunteer ,காய்ச்சல் ,மு.க.ஸ்டாலின்,திமுக தொண்டர்



மக்களின் தேவைகளை, அவர்களுக்கான வசதிகளை நிறைவேற்ற வேண்டிய முதலமைச்சர் என்னும் பொறுப்பைச் சுமந்துள்ள நிலையில், அந்தப் பொறுப்பை வழங்கியது, திமுக எனும் பேரியக்கத்தின் வெற்றிதான் என்பதை நான் ஒரு நொடிப் பொழுதும் மறந்ததில்லை.

இன்று முதலமைச்சர் என்ற பொறுப்பில் அமர்ந்து, மாநிலத்தின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் பாடுபடும் அதேநேரத்தில், உள்ளாட்சி ஜனநாயகம் தழைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதிலும் உறுதியோடு இருக்கிறேன்.அதனால்தான், ஓய்வெடுக்க வேண்டி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ள நாளிலும், ஓய்வின்றி சிந்தித்து, அதனைச் செயல்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, இலக்கை அடைவதில் முனைப்பாக இருக்கிறேன்.

இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும் அதிக உத்வேகத்துடனும் அரசுப் பணிகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் வழக்கம்போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு.

உடன்பிறப்புகளாம் உங்களுடைய பேரன்பின் பலம் கொண்டு, அந்த இலக்கை அடைவதற்கான செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|