Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவினால் ஏற்படும் ஒட்டுமொத்த பேரழிவிற்கு காரணம் முதல்வர்தான் - மு.க.ஸ்டாலின்

கொரோனாவினால் ஏற்படும் ஒட்டுமொத்த பேரழிவிற்கு காரணம் முதல்வர்தான் - மு.க.ஸ்டாலின்

By: Monisha Sun, 28 June 2020 11:42:05 AM

கொரோனாவினால் ஏற்படும் ஒட்டுமொத்த பேரழிவிற்கு காரணம் முதல்வர்தான் - மு.க.ஸ்டாலின்

கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை தந்தார் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கூறியுள்ளதாவது:-

கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன். நான் சொன்ன ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை முதல்வர் கேட்கவும் இல்லை, செய்யவும் இல்லை. கொரோனாவை தடுக்க தொடர்ந்து நிறைய ஆலோசனைகளை தந்துள்ளேன். ஏராளமான மருத்துவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் சொன்னேன்.

mk stalin,coronavirus,social dissemination,politics,edapadi palanisamy ,மு.க.ஸ்டாலின்,கொரோனா வைரஸ்,சமூக பரவல்,அரசியல்,எடப்பாடி பழனிசாமி

இவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்கிறது என முதல்வர் அலட்சியமாக இருக்கிறார். கொரோனாவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கொரோனா சமூக பரவலாகவில்லை என்ற வார்த்தை விளையாட்டாக மக்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார் முதல்வர். தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்படும் ஒட்டுமொத்த பேரழிவிற்கு காரணம் முதல்வர்தான். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags :