இன்னும் 3 நாட்களுக்கு மிதமான மழை
By: vaithegi Wed, 28 Dec 2022 3:23:39 PM
சென்னை: நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக 28-12-2022 முதல் 30-12-2022 வரை:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31-12-2022 முதல் 01-01-2023 வரை:- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மைய தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.
இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம் (திருநெல்வேலி) 12 செண்டி மீட்டர் மழையு,, ஆயிக்குடி (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி). திருச்செந்தூர் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 5 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.