19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்; வானிலை மையம் அறிவிப்பு
By: Nagaraj Sun, 02 Aug 2020 6:14:11 PM
19 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர் ,கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் 48 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி,
மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் வானம் மேக
மூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை
பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணியில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.