Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

By: vaithegi Tue, 02 May 2023 09:39:18 AM

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு ......... தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதனால்,இன்று மற்றும் நாளை பெரும்பாலான இடங்களிலும்,மேலும் வருகிற 4, 5-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rain and meteorological research centre ,மழை ,வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்

இதனை அடுத்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், , நாமக்கல், சேலம் போன்ற 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :