Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்திலிருந்து வருகிறது வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன இயந்திரங்கள்

இங்கிலாந்திலிருந்து வருகிறது வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன இயந்திரங்கள்

By: Nagaraj Sun, 31 May 2020 7:55:09 PM

இங்கிலாந்திலிருந்து வருகிறது வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன இயந்திரங்கள்

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நவீன இயந்திரங்கள்... ஆப்பிரிக்கா நாடுகளில் விவசாயப் பயிர்களை நாசமாக்கிய வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், இந்த வெட்டுக்கிளிகளால் நாட்டில் பேரழிவு ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இப்படியே விட்டால் பயிர்கள் எல்லாம் நாசமாகி போய்விடும் இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

locusts,authorities,modern machinery,fears,people ,வெட்டுக்கிளிகள், அதிகாரிகள், நவீன இயந்திரம், அச்சம், மக்கள்

இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இயந்திரங்கள் ஜூன் மாதத்தில் வர இருப்பதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பூச்சி கொல்லிகள் தெளிக்கும் நவீன இயந்திரங்கள் பொறுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து ஜூன் முதல் வாரத்தில் பாதி இயந்திரங்கள் வரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த நேரலகிரி கிராமத்தில் ஏராளமான வெட்டுக்கிளிகள் பறந்து கொண்டிருந்தன. இதனை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் இருப்பது பாலைவன லோகஸ்ட் வெட்டுக்கிளி படையில்லை; லோக்கல் வெட்டுக்கிளிகள் தான் என்று தெரிவித்துள்ளனர்.

Tags :
|