ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை
By: vaithegi Wed, 17 Aug 2022 07:49:29 AM
ஈரான் : கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதனை அடுத்து இந்த நிலையில், ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கம்மை நோய், தற்போது உலகம் முழுவதும் பரவி கொண்டு வருகிறது.
எனவே இதன் காரணமாக பல நாடுகளில் மிகவும் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இந்த நிலையில், ஈரான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே அந்த 34 வயது பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகிறார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.