Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி

சென்னையில் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி

By: vaithegi Fri, 14 Oct 2022 2:11:49 PM

சென்னையில் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி

சென்னை: சென்னையில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் போரூர், அடையாறு, வானகரம், ஆவடி, அம்பத்தூர் ஐ.டி.காரிடர் போன்ற இடங்களில் மின் தடை செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.

அதில் போரூரில் ருக்மணி நகர், பூந்தமல்லி, தேவதாஸ் நகர், நண்பர்கள் நகர், ஆகிய பகுதிகளிலும், அடையாறில் சோழ மண்டல தேவி நகர், திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

electrical maintenance work,chennai ,மின் பராமரிப்பு பணி,சென்னை

அதை தொடர்ந்து வானகரத்தில் நூம்பல் மெயின் ரோடு, எஸ்.ஆர்.எம்.சி செட்டியார் அகரம் மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தாக ஆவடி பகுதியில் முருகப்பா பாலிடெக்னிக், பிருந்தாவன் அவென்யூ ஆகிய பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும்.

மேலும் பட்டாபிராம் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், செந்தமிழ் நகர், அண்ணா நகர் ஆகிய இடங்களிலும் அதே போல அம்பத்தூரில் அயபாக்கம், வி.ஐ.பி. பாக்ஸ் ஆகிய பகுதிகளிலும் ஐ.டி.காரிடர் பகுதியில் ஸ்டேட் பாங்க் காலனி, ஓ.எம்.ஆர்.பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மின் விநியோகம் தடை செய்யப்படும்.

Tags :