Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 23) அன்று அம்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி...மின்தடை

சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 23) அன்று அம்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி...மின்தடை

By: vaithegi Fri, 22 July 2022 8:36:17 PM

சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 23) அன்று அம்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி...மின்தடை

சென்னை: மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம் என்பதால் பராமரிப்பு பணி நடைபெறும் பொது சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.அவ்விதமாக நாளை ஜூலை 23ம் தேதி சென்னையில் உள்ள அம்பத்தூர் பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

அதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய அம்பத்தூரை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

power outage,chennai ,மின்தடை,சென்னை

இதனை தொடர்ந்து நாளை காலை 9.30 முதல் 2 மணி வரை அம்பத்தூர் பகுதியில் உள்ள சிட்கோ, ஈ.பி.ரோடு, கண்ணன் கோவில் தெரு, பிராமின் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, குளக்கரை தெரு. பகுதிகளில் மின்விநியோகம் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் பெரம்பூர் பகுதியில் உள்ள சிட்கோ, அகத்தியர் நகர், எம்.டி.எச் சாலை, குமாரசாமி நகர், பொன்விழா நகர், சிவசக்தி காலனி, அன்னை சத்யா நகர். இந்த அனைத்து பகுதிகளில் மின்தடை ஏற்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் தொடங்கும்.

Tags :