- வீடு›
- செய்திகள்›
- காரைக்குடி பகுதிகளில் உள்ள துணை மின்நிலையத்தில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி ... மின்தடை
காரைக்குடி பகுதிகளில் உள்ள துணை மின்நிலையத்தில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி ... மின்தடை
By: vaithegi Sat, 10 Sept 2022 7:57:29 PM
காரைக்குடி : காரைக்குடி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் வரும் திங்கட்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இதனால் காரைக்குடி பகுதியை சுற்றியுள்ள கோவிலூர் அருகே உள்ள மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கட்கிழமை (செப்.12) மின் விநியோகம் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது என்பதை பார்க்கலாம்.அந்த வகையில் கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் உள்ள மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், ஆலங்குடி
இதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை, செட்டிநாடு பப்ளிக் பள்ளி பகுதிகள், இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியாபுரம்ஆகிய பகுதிகளிலும்
மேலும் கம்பனூா், வலையப்பட்டி, கொங்கரத்தி, கண்டரமாணிக்கம், கீழ்பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என துணை மின்நிலைய செயற்பொறியாளர் எம். லதா தேவி தெரிவித்துள்ளார்.