- வீடு›
- செய்திகள்›
- இலந்தைகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி..இந்த பகுதிகளில் மின் தடை
இலந்தைகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி..இந்த பகுதிகளில் மின் தடை
By: vaithegi Mon, 01 Aug 2022 12:43:57 PM
சென்னை: தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதை அடுத்து மதுரை மாவட்டம் இலந்தைகுளம், ஐ.டி.பார்க் துணைமின்நிலையத்தில் நாளை ( 02.08.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை
மேலும் மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத் தோட்டம், உத்தங்குடி, உலகநேரி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரன்பட்டி, டெலிகாம் நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர் போன்ற பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.