Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சந்திரயான்-3 எடுத்து அனுப்பிய நிலவின் புகைப்படங்கள் வெளியீடு

சந்திரயான்-3 எடுத்து அனுப்பிய நிலவின் புகைப்படங்கள் வெளியீடு

By: Nagaraj Mon, 21 Aug 2023 6:43:59 PM

சந்திரயான்-3 எடுத்து அனுப்பிய நிலவின் புகைப்படங்கள் வெளியீடு

ஐதராபாத்: இஸ்ரோ நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியுள்ளது. அங்கு எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணி வெற்றிகரமாக ஆகஸ்ட் 17ம் தேதி மேற்கொண்டது.

new photos,isro,vikram lander,landing,viral ,புதிய புகைப்படங்கள், இஸ்ரோ, விக்ரம் லேண்டர், தரையிறங்கும், வைரல்

விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு, நிலவின் முதல் படங்களை பதிவிட்டுள்ளது. அதே போல் ஆகஸ்ட் 18 முதல் விண்கலத்தில் இருந்த பிரிந்த பிறகு லேண்டரின் சுற்று வட்டப்பாதை குறைக்கப்பட்டது. பின்னர் 2வது முறையாக லேண்டரின் சுற்று வட்டப்பாதை நேற்று அதிகாலை 2 மணிக்கு குறைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆக.23ம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Tags :
|