Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மெட்ரோ இரயிலில் பயணித்த பயணிகள் அதிகம்

கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மெட்ரோ இரயிலில் பயணித்த பயணிகள் அதிகம்

By: vaithegi Thu, 01 June 2023 2:57:20 PM

கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மெட்ரோ இரயிலில் பயணித்த பயணிகள் அதிகம்


சென்னை : மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் பயணிகள் பயணம் .... சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 575 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இப்பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதிலிருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணித்துள்ளனர் எனவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது:-நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் மட்டும் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 66,85,432 பயணிகளும் மற்றும் மே மாதத்தில் மட்டும் 72,68,007 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

metro rail,passengers,travel , மெட்ரோ இரயில்,பயணிகள் ,பயணம்

இதையடுத்து இதில் அதிகபட்சமாக 24.05.2023 அன்று 2,64,974 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.2023, மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 26,76,546 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 42,18,357 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,61,748 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,218 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 5,138 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்து உள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என அதில் தெரிவித்துள்ளது.

Tags :