Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு

By: vaithegi Sat, 13 Aug 2022 11:35:03 AM

சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு

சென்னை: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மிகவும் களை கட்டியுள்ளன. ஏராளமான மக்கள் வீடுகள் தோறும் தேசிய கொடிகளை ஏற்றியுள்ளனர். சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர் குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் சதி திட்டத்தில் ஈடுபடலாம் என்றும், எனவே மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

எனவே இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

independence day,police security ,சுதந்திர தினம்,போலீசார் பாதுகாப்பு

இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பிறப்பித்து உள்ளார்.

மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் போன்ற அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரெயில்வே தண்டவாளங்கள், கோவில்களை சுற்றி உள்ள இடங்கள் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags :