பராமரிப்பு பணிகளால் இன்று 130க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து
By: vaithegi Thu, 18 Aug 2022 4:55:28 PM
இந்தியா: பயணிகள் வசதிக்காக தற்போது கொரோனா கால கட்டத்திற்கு முன்பு இருந்தது போல அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து கடந்த வாரம் கனமழை, ரயில் பராமரிப்பு பணிகள் ஆகியவற்றின் காரணமாக நாடு முழுவதும் சுமார் 216 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில் 179 ரயில்கள் முழுவதுமாகவும் மீதமுள்ளதை 37 ரயில்கள் பகுதி நேரமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இன்று (ஆகஸ்ட் 18) 130 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதில் 106 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 27 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் ரயில்வே வாரியத்தின் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.