Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 4 மாவட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களை 10-ந் தேதி திறக்க ஏற்பாடு

4 மாவட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களை 10-ந் தேதி திறக்க ஏற்பாடு

By: Monisha Mon, 02 Nov 2020 9:11:30 PM

4 மாவட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களை 10-ந் தேதி திறக்க ஏற்பாடு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து தியேட்டர்களும் கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து சினிமா தியேட்டர்கள் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதையொட்டி வருகிற 10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், சினிமா தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகளில் பொதுமக்கள் அமர வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

corona virus,theaters,curfew,cleaning work ,கொரோனா வைரஸ்,தியேட்டர்கள்,ஊரடங்கு,சுத்தப்படுத்தும் பணி

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. சேலம் பகுதியில் மட்டும் சுமார் 30-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளது. இந்த தியேட்டர்களை வருகிற 10-ந் தேதி திறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

தியேட்டர்கள் உட்புறம் மற்றும் வெளிப்புறம் பகுதி முழுவதும் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. குறிப்பாக கழிவறை பகுதிகள் மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் தூய்மை செய்யும் பணியும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags :
|