Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

By: Karunakaran Thu, 18 June 2020 09:55:28 AM

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும், கொரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் அம்மாநில சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா விவரத்தை வெளியிட்டது. அதன்படி, நேற்று மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 307 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது.

maharashtra,coronavirus,health department,corona death ,மகாராஷ்டிரா,கொரோனா பாதிப்பு,சுகாதாரத்துறை,கொரோனா பலி

நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்புடையவர்களில் 1,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 166 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததாலும், மேலும் கொரோனா பரிசோதனை அதிகரித்துள்ளதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

Tags :