இந்தியாவில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
By: vaithegi Thu, 30 Mar 2023 11:27:18 AM
இந்தியா: இன்று ஒரே நாளில் 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா ..... இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வாரங்களில் 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நேற்று 2151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில்,
இன்று 3,016 என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,903 என்பதிலிருந்து 13,509ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 1,222 பேர் குணமடைந்துள்ளனர். இதே போன்று , இன்று 1,396 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொற்றால் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.