Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனாவால் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

ரஷ்யாவில் கொரோனாவால் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

By: Nagaraj Sat, 28 Nov 2020 10:40:08 PM

ரஷ்யாவில் கொரோனாவால் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு... ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் மொத்தமாக 39ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் 39ஆயிரத்து 68பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக மாறியுள்ள ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 22 இலட்சத்து 42ஆயிரத்து 633பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

russia,corona,number of victims,victims ,ரஷ்யா, கொரோனா, பலி எண்ணிக்கை, பாதிக்கப்பட்டவர்கள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 27ஆயிரத்து 100பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 510 பேர் உயிரிழந்து உள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 64ஆயிரத்து 95பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 17இலட்சத்து 39ஆயிரத்து 470பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|