அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு
By: Karunakaran Mon, 06 July 2020 10:42:06 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவியது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
உலகளவில் 1 கோடியே 15 லட்சத்து 49 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உடையவர்களில் 44 லட்சத்து 85 ஆயிரத்து 886 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இதில் 58 ஆயிரத்து 509 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 65 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.