உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 6 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
By: Karunakaran Sun, 02 Aug 2020 4:29:11 PM
சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மேலும் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். தற்போது வரை உலகம் முழுவதும் 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.