ஈரானில் கொரோனாவால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
By: Nagaraj Thu, 19 Nov 2020 10:46:21 PM
எட்டு இலட்சம் பேர் பாதிப்பு... ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் எட்டு இலட்சத்து ஆயிரத்து 894பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை 42ஆயிரத்து 941பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 421பேர் பாதிக்கப்பட்டதோடு, 480பேர் உயிரிழந்தனர்.
தற்போதுவரை
ஒரு இலட்சத்து 81ஆயிரத்து 970பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு
அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்
ஐந்தாயிரத்து 712பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 76ஆயிரத்து 983பேர் வைரஸ்
தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.