Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

By: vaithegi Mon, 03 Apr 2023 09:58:17 AM

8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு

சென்னை: பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ம் தேதி தொடங்கியது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இதனை அடுத்து இவர்களில் மொழிப்பாடங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தநிலையில், தேர்வை எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை துணைத்தேர்வில் பங்கேற்கவைக்க கல்வித்துறை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

public examination,students,students ,பொதுத்தேர்வு ,மாணவ,மாணவிகள்

இந்நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற இருக்கிறது. இதையடுத்து பொதுத்தேர்வின் கடைசி நாளான இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் போன்ற பாடங்களுக்கான தேர்வை எழுத இருக்கின்றனர்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ம் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :