Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராசிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அதிரடி ஆய்வு

ராசிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அதிரடி ஆய்வு

By: Nagaraj Thu, 12 Oct 2023 5:59:43 PM

ராசிபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அதிரடி ஆய்வு

சேலம்: அதிரடி ஆய்வு... ராசிபுரம் பேருந்துநிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பைப் ஹாரன்களைப் பயன்படுத்துவதால் பேருந்துகளில் பிரேக் செயல் இழக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்ததுடன், 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்து அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களையும் பறிமுதல் செய்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்த ஆர்.டி.ஓ நித்தியா, அங்கு நின்றிருந்த தனியார் பேருந்துகளின் ஹாரன்களை அடித்து பார்த்து அதிக ஒலி எழுப்பும் பைப் ஹாரன்களை கழற்ற வைத்து பறிமுதல் செய்தார்

school bus,inspection,horns,instruction,private buses ,பள்ளி பேருந்து, ஆய்வு, ஹாரன்கள், அறிவுறுத்தல், தனியார் பேருந்துகள்

கழற்ற மறுத்தவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்ததால் வேகவேகமாக ஹாரனை கழற்றிக் கையில் கொடுத்தனர்.

வேக்குவம் ஹாரனை ஒலிக்கும் போது பிரசர் குறைந்து பேருந்தில் பிரேக் பிடிக்காது என்று தெரிந்தும், எப்படி அந்த அதிக சத்தம் எழுப்பும் ஹாரனை பயன்படுத்துகிறீர்கள் என்று ஓட்டுனர்களிடம் கடிந்து கொண்டார்

சில பேருந்து ஓட்டினர்கள் முன்கூட்டியே கழற்றிக் கொண்டிருந்த போது கையும் களவுமாக சிக்கினர். இன்னும் சில ஓட்டுனர்கள் ஹாரன்களை கழற்றி பேருந்துக்குள்ளும் பெட்டிக்கடையிலும் பதுக்கி வைத்தும் சிக்கிக் கொண்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பைப் ஹாரன்களை டயருக்கு அடியில் வைத்து நசுக்க வைத்தார் ஆர்.டி.ஓ நித்தியா.

அங்கு நின்றிருந்த பள்ளிப் பேருந்தை ஆய்வு செய்து, இதுபோன்ற ஹாரன்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றார் தொடர்ந்து ஒருவழிபாதையில் வந்த காரை மறித்து அபராதம் விதித்த அவர் கார் ஓட்டுனரை எச்சரித்தார்.

Tags :
|