Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்து: தி.மு.க. பிரமுகர் பலி

மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்து: தி.மு.க. பிரமுகர் பலி

By: Monisha Sat, 31 Oct 2020 10:52:34 AM

மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்து: தி.மு.க. பிரமுகர் பலி

மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தஞ்சாவூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் பலியாகியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 68). இவர் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஆக இருந்தார். இந்தநிலையில் நேற்று பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது சுந்தரக்கோட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பன்னீர்செல்வத்தின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

motorcycle,accident,dmk,dead,thanjavur ,மோட்டார்சைக்கிள்,விபத்து,தி.மு.க,பலி,தஞ்சாவூர்

தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பன்னீர்செல்வம் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|