ரொறன்ரோவில் காலநிலை சீர்கேடு தொடர்பாக வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
By: Nagaraj Mon, 30 Jan 2023 12:13:44 PM
கனடா: பொது மக்களுக்கு எச்சரிக்கை... ரொறன்ரோவில் மீண்டும் காலநிலை சீர்கேடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ நகரம் மட்டுமன்றி ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் இந்த வாரத்திலும் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாகாணத்தின் அநேக பகுதிகளில் 10 முதல் 15 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோ மற்றும் தென் ஒன்றாரியோவில் இவ்வாறு பனிப்பொழிவு நீடிக்கும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாகாணத்தின் தென் பகுதியில் நிலவி வரும் தாழமுக்க நிலையில் அதிகளவான பனிப்பொழிவினை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.