Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எம்.பி., பதவி பறிப்பால் அரசு பங்களாவில் வசிக்க முடியாத நிலையில் ராகுல் காந்தி

எம்.பி., பதவி பறிப்பால் அரசு பங்களாவில் வசிக்க முடியாத நிலையில் ராகுல் காந்தி

By: Nagaraj Sat, 25 Mar 2023 11:27:03 PM

எம்.பி., பதவி பறிப்பால் அரசு பங்களாவில் வசிக்க முடியாத நிலையில் ராகுல் காந்தி

புதுடில்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.பி., பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி, டில்லி, துக்ளக் லேன், எண்.12ல் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். 2004 தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அந்த பங்களாவில் வசித்து வருகிறார். இப்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து அரசு பங்களாவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

bungalow,government,new delhi,rahul gandhi , அரசு பங்களா, புது தில்லி, ராகுல் காந்தி, லோக்சபா

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம், “லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் வசிக்க முடியாது.

தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்திக்கு தடை விதிக்காவிட்டால் பங்களாவை காலி செய்ய நேரிடும்.

Tags :