- வீடு›
- செய்திகள்›
- எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம்
எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக இன்று பயணம்
By: vaithegi Tue, 11 Apr 2023 10:01:26 AM
புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எனவே இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.
இதனை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில், எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி முதன்முறையாக 11-ந்தேதி (இன்று), பயணம் செய்ய உள்ளார்.
இதையடுத்து இப்பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிட்டு உள்ளார். மேலும் சாலை வழி பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டுவுள்ளது.