சின்சினாட்டி நகரில் பலமுறை துப்பாக்கிச்சூடு
By: Nagaraj Mon, 17 Aug 2020 4:18:22 PM
துப்பாக்கிச்சூடு... அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் பலமுறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதே நகரில் நேற்று காலை முதல் 4 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முதலில் வால்நட் ஹில்ஸ் என்ற இடத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயமடைந்தனர்.
2வதாக சால்ஃபோன்ட் பிளேஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்
அன்டோனியா பிளேர் என்ற கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
3வதாக ஈஸ்ட் மெக்மிகன் அவென்யூ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்
இருவர் கொல்லப்பட்டும் 8 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
வெஸ்ட்
என்ட் என்ற இடத்தில் 4வது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில்
ஒருவர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து நடந்த வன்முறைச் சம்பவங்களால்
சின்சினாட்டி பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். 4 நிகழ்வுகளும்
தனித்தனியாக நடந்தவை என்று கூறிவரும் போலீசார், துப்பாக்கிச் சூடு
நடத்தியவர்களைத் தேடி வருகின்றனர்.