Advertisement

மும்பை-நாகர்கோவில் பயணிகள் ரயில் கால அட்டவணை மாற்றம்

By: Monisha Tue, 01 Dec 2020 12:40:03 PM

மும்பை-நாகர்கோவில் பயணிகள் ரயில் கால அட்டவணை மாற்றம்

மும்பை-நாகர்கோவில் பயணிகள் ரயிலின் கால அட்டவணை மாற்றம் குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கு வாரம் தோறும் 4 நாட்கள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மும்பைக்கு செல்லும் போது தமிழக பகுதிகளில் பகல் நேரங்களில் பயணிக்கிறது. ஆனால் மறுமார்க்கமாக மும்பையில் இருந்து தமிழக பகுதிகளுக்கு பயணிக்கும் போது இரவு நேரத்தில் இயக்கப்படுகிறது. பயணிகள் மும்பையில் இருந்து இந்த ரயில்களில் பயணிக்கும் போது இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

எனவே மும்பையில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக பயணிக்கும் இந்த ரயிலின் கால அட்டவணையை தமிழக பகுதிகளில் பகல் நேரங்களில் பயணிக்குமாறு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பலனாக இந்த ரயில் தென் மாவட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் பயணிக்கும்படி காலஅட்டவணை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

train,schedule,request,change,action ,ரயில்,அட்டவணை,கோரிக்கை,மாற்றம்,நடவடிக்கை

இந்தநிலையில் மும்பை ரயிலின் வழித்தடம் பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் செல்லாமல் திருப்பத்தூரில் இருந்து காட்பாடி, சித்தூர், பக்காலா, மடன்பாளி ரோடு, தர்மாவரம் வழியாக செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்த ரயில் குப்பம், பங்கார்பேட், கிருஷ்ணராஜபுரம், ஹிந்த்பூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு போகாமல் செல்வதால் தென் மாவட்டத்தில் இருந்து பெங்களூருக்கு செல்ல பகல் நேர ரயில் சேவை இல்லாமல் உள்ளது.

ஏற்கனவே தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு மிக குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயிலும் பெங்களூரு செல்லாமல் இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெங்களூரு வாழ் தமிழர்களை மிகவும் பாதிக்கும். எனவே இதற்கு மாற்று ஏற்பாடாக பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஜனசதாப்தி ரயில் இயக்க வேண்டும்.

தென் மாவட்டங்களில் இருந்து தமிழகம் வழியாக மும்பைக்கு தற்போது தினசரி ரயில் சேவை இல்லாத குறை உள்ளது. எனவே நாகர்கோவில்-மும்பை(16339-16340) ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்து சூப்பர் பாஸ்ட் ரயிலாக இயக்க வேண்டும். மேலும் மும்பை செல்லும் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 20 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. இதை 10 மணி நேரமாக குறைத்தால் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி குறையும். எனவே இதுதொடர்பாக ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|