Advertisement

52 நாட்களுக்கு பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்

By: Nagaraj Sun, 30 Oct 2022 6:35:02 PM

52  நாட்களுக்கு பின்னர் உண்ணாவிரதத்தை கைவிட்ட முருகன்

வேலூர்: 52 நாட்களுக்கு பிறகு முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். இன்று காலை அவர் ஜெயில் உணவு சாப்பிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி சிறை நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தார்.

அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி கடந்த 8ம் தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

Tags :
|