Advertisement

யாரையோ திருப்திபடுத்த எனது மகனை கைது செய்துள்ளனர்

By: Nagaraj Tue, 15 Dec 2020 8:26:02 PM

யாரையோ திருப்திபடுத்த எனது மகனை கைது செய்துள்ளனர்

சித்ராவின் மாமனார் வேதனை... பிரபல டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் யாரையோ திருப்திபடுத்த போலீசார் எனது மகனை கைது செய்துள்ளனர் என சித்ராவின் மாமனார் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் தற்கொலை சின்ன திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை குறித்து பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை காதலித்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கும், ஹேம்நாத்க்கும் பதிவு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சித்ராவுக்கும், அவரது தாய் விஜயாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் கணவர் ஹேம்நாத் விடுதிக்கு வெளியில் இருந்ததாக கூறப்படுகிறது.

chitra,father-in-law,my son,arrested,to satisfy ,சித்ரா, மாமனார், எனது மகன், கைது, திருப்திபடுத்த

தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் உடலில் ரத்த காயங்கள் இருந்துள்ளது. கணவர் ஹேம்நாத் சித்ராவிடம் சண்டை போட்டு விடுதி அறையை விட்டு வெளியே போன பிறகு சித்ரா தற்கொலை செய்துகொண்டாரா? என போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சித்ராவை யாரும் கொடுமைப்படுத்தவில்லை. பணம், நகை எல்லாம் கேட்வில்லை. யாரையோ திருப்திபடுத்த போலீசார் எனது மகனை கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சித்ரா தற்கொலை வழக்கில், அமைச்சர், எம்எல்ஏக்கள் பலரது பெயர் அடிபடும் நிலையில், ஹேம்நாத்தின் தந்தையின் பேட்டி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

Tags :
|
|