Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பாதித்தவர்கள் குறித்தே என் சிந்தனை உள்ளது; பிரதமர் ஜஸ்டின் வேதனை

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பாதித்தவர்கள் குறித்தே என் சிந்தனை உள்ளது; பிரதமர் ஜஸ்டின் வேதனை

By: Nagaraj Tue, 19 May 2020 11:07:56 AM

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் பாதித்தவர்கள் குறித்தே என் சிந்தனை உள்ளது; பிரதமர் ஜஸ்டின் வேதனை

இலங்கையில் மோதல் முடிவிற்கு வந்து பதினொரு வருடங்களாவதை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை எனது சிந்தனைகள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுடைய நேசத்திற்குரியவர்கள் தொடர்பாகவே உள்ளது என்று
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து பதினொரு வருடங்கள் கடந்துள்ளது. நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:


procedure,prime minister justin,request,sri lanka ,செயல்முறை, பிரதமர் ஜஸ்டின், வேண்டுகோள், இலங்கை

இலங்கையில் மோதல் முடிவிற்கு வந்து பதினொரு வருடங்களாவதை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை எனது சிந்தனைகள் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய குடும்பங்கள், அவர்களுடைய நேசத்திற்குரியவர்கள் தொடர்பாகவே உள்ளது.

இது முள்ளிவாய்க்காலின் இறுதிக் கட்டப்போரிபோது இழக்கப்பட்ட உயிர்கள் உட்பட 26 வருட யுத்தம் குறித்து சிந்திப்பதற்கான தருணமாகும் காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள், வீடுகள், சமூகங்களில் இருந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் குறித்தும் நினைவில் கொண்டு வர வேண்டும்.

procedure,prime minister justin,request,sri lanka ,செயல்முறை, பிரதமர் ஜஸ்டின், வேண்டுகோள், இலங்கை

கடந்த 11 வருடங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல கனடா பிரஜைகளை சந்தித்துள்ளேன். கணக்கிட முடியாத இழப்புகள், மிகப்பெரிய துன்பம் என்பன நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து பாடுபடவேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தியுள்ளன. கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு முக்கியம், அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் செயல்முறையை பின்பற்றுமாறு இலங்கைக்கான எனது வேண்டுகோளை நான் மீண்டும் விடுக்கின்றேன்.

கனடா இலங்கை அரசாங்கத்திற்கும் நீதி நல்லிணக்கம் அனைவரையும் உள்வாங்குதல் ஆகியவற்றினை நோக்கி பணியாற்றுபவர்களிற்கும் தனது ஆதரவை தொடர்ந்தும் வழங்கும். இவை அனைத்தும் இலங்கையில் நீண்ட கால சமாதானம் மற்றும் செழிப்பினை உறுதிசெய்யக்கூடிய விடயங்கள் என தெரிவித்துள்ளார்.

Tags :