Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகா மாநிலத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பு தக்காளிகளை திருடிச் சென்ற மர்மநபர்கள்

கர்நாடகா மாநிலத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பு தக்காளிகளை திருடிச் சென்ற மர்மநபர்கள்

By: Nagaraj Thu, 06 July 2023 11:55:39 PM

கர்நாடகா மாநிலத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பு தக்காளிகளை திருடிச் சென்ற மர்மநபர்கள்

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் பண்ணையிலிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள தக்காளிகள் திருட்டு போய்விட்டதாக பெண் விவசாயி கண்ணீருடன் போலீசில் புகார் செய்துள்ளார்.

தக்காளி விலை நாடு முழுவதும் உயர்ந்துள்ள நிலையில், கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் பெண் விவசாயியின் பண்ணையிலிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளிகள் திருடு போயுள்ளன.

thieves,tomatoes,snatched away,complaint,police ,திருடர்கள், தக்காளி, பறித்து சென்றனர், புகார், போலீஸ்

இதுகுறித்து பெண் விவசாயியான தாரிணி, ஹலபேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், பெங்களூருவில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு மேல் விலை போவதால், தனது 2 ஏக்கர் நிலத்தில் நன்கு விளைந்திருந்த தக்காளிகளை அறுவடை செய்து சந்தைக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதற்குள் திருடர்கள் தக்காளிகளை பறித்து சென்றுவிட்டதாக புகாரில் விவசாயி தாரிணி குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :