Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் - விவசாயத்துறை எச்சரிக்கை

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் - விவசாயத்துறை எச்சரிக்கை

By: Karunakaran Thu, 30 July 2020 1:51:10 PM

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் - விவசாயத்துறை எச்சரிக்கை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதன் காரணமாக லட்சக்கணக்கில் மக்கள் உயிரை இழந்துள்ளனர். சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் மற்ற சில நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது.

தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்துள்ளதாகவும், அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என பொதுமக்களுக்கு அமெரிக்காவின் விவசாயத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

warning,china,america,mysterious seed,agriculture department ,எச்சரிக்கை, சீனா, அமெரிக்கா, மர்ம விதை, வேளாண்மைத் துறை

அந்த விதைகள் மற்றும் அதன் பேக்கேஜ்களை பத்திரமாக வைத்திருந்து உள்ளூரில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என அமெரிக்காவின் விவசாயத் துறை தெரிவித்துள்ளது. இதுபோல் கனடாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து சீன செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், இந்த போலி பார்சலை சீனாவுக்கு திருப்பித் அனுப்புமாறு சீனா, அமெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளது, அப்போது தான் அதுகுறித்து சீனா விசாரிக்க முடியும் எனவும், விதைகளை கையாள்வது குறித்த யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் விதிகளை சீன தபால் சேவை கண்டிப்பாக கடைபிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

Tags :
|