Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெற்றோருடன் தூங்கிய 4 மாத ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண்

பெற்றோருடன் தூங்கிய 4 மாத ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண்

By: Nagaraj Tue, 25 July 2023 7:32:20 PM

பெற்றோருடன் தூங்கிய 4 மாத ஆண் குழந்தையை கடத்திய மர்ம பெண்

கன்னியாகுமரி: குழந்தையை கடத்திய மர்ம பெண்... கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத ஆண் குழந்தையை கடத்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியை சேர்ந்த முத்துராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பேருந்து நிலையத்திலேயே தங்கி பாசிமாலை போன்றவற்றை வியாபாரம் செய்து வருகிறார்.

mystery woman,investigation,child abduction,cctv cameras,search ,மர்ம பெண், ஆய்வு, குழந்தை கடத்தல், சிசிடிவி கேமராக்கள், தேடல்

இந்நிலையில், நேற்று இரவு தூங்கிய தம்பதி, அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, நள்ளிரவில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி சென்றதாக கூறியதாக தெரிகிறது.

முத்துராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, மர்மப்பெண் குழந்தையுடன் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததையடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags :