சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பலி எண்ணிக்கை சற்றே குறைந்தது
By: Nagaraj Wed, 22 July 2020 2:15:53 PM
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் காலை வரை 13 பேர் பலியாகி உள்ளனர். தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பாதிப்புகள் சற்றே குறைந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் உச்சத்தை தொட்டு வருகிறது கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 1.85 லட்சத்தை கடந்துள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 13 பேர்
கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக நாளொன்று
சராசரியாக 20 என இருந்து வந்த பலி எண்ணிக்கை தற்போது, அரசின் தடுப்பு
நடவடிக்கைகளினால் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு
மருத்துவமனையில் 4 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி
மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் தலா 3 பேரும் சிகிச்சை
பலனின்றி பலியாகி உள்ளனர்.