Advertisement

5வது முறையாக முதல்வராக பதவியேற்றார் நெய்பிபு ரியோ

By: Nagaraj Tue, 07 Mar 2023 7:53:03 PM

5வது முறையாக முதல்வராக பதவியேற்றார் நெய்பிபு ரியோ

கோஹிமா: 5வது முறையாக முதல்வர்... நாகாலாந்து மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், என்டிபிபி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 5வது முறையாக முதல்வராக நெய்பிபு ரியோ பதவியேற்றுள்ளார்.

நாகாலாந்தில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 60 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக 12 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான என்டிடிபி 25 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதன்படி கூட்டணி கட்சிகள் சார்பில் என்டிபிபி கட்சியை சேர்ந்த நெய்பியு ரியோ 5வது முறையாக முதல்வராக பதவியேற்பது என முடிவு செய்யப்பட்டது.

cm,nagaland,rio , நாகாலாந்து, நெய்பியு ரியோ, முதல்வர்

அதன்படி, முதல்வர் பதவியேற்பு விழா நாகாலாந்து மாநிலம் கோஹிமாவில் இன்று தொடங்கியது. இதில் ரியோ பிரதமராக பதவியேற்று, ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில ஆளுநர் லெப்டினன்ட் கணேஷ், பாஜக தேசிய தலைவர் ஜேபி, நாடா அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
|