Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாய சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி நரேந்திரசிங் தோமர் அழைப்பு

விவசாய சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி நரேந்திரசிங் தோமர் அழைப்பு

By: Karunakaran Tue, 01 Dec 2020 12:34:24 PM

விவசாய சங்கத்தினர் இன்று பேச்சுவார்த்தைக்கு வரும்படி நரேந்திரசிங் தோமர் அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.

narendrasingh tomar,farmers unions,struggle,delhi ,நரேந்திரசிங் தோமர், விவசாயிகள் சங்கங்கள், போராட்டம், டெல்ஹி

இருப்பினும் டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்துவிட்டனர்.

தற்போது, இன்றே பேச்சுவார்த்தைக்கு வரலாம் என மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமல் விவசாய சங்கங்களுக்குஅழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் உள்ள விஞ்யான் பவன் அரங்கில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெறும் என நரேந்திரசிங் தோமல் தெரிவித்துள்ளார்.

Tags :