Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை அறிவித்த நாசா!

நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை அறிவித்த நாசா!

By: Monisha Fri, 11 Dec 2020 08:44:26 AM

நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை அறிவித்த நாசா!

1961-ம் ஆண்டு முதல் இன்றுவரை 36 நாடுகளைச் சேர்ந்த சுமார் 550-க்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வலம் வந்திருக்கிறார்கள். 18 விண்வெளி வீரர்கள் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா என்ற பெண்மணியும் ஒருவர். இந்தியாவின் செயற்கைகோள் ஒன்றுக்கு அவரது நினைவாக 'கல்பனா' என்று பெயர் சூட்டப்பட்டது. மறைந்த அவரது நினைவாக பல்வேறு பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

விண்வெளியில் நிலவைச் சென்றடையும் முயற்சியில் அமெரிக்கா முதல் வெற்றியை அடைந்தது. 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள், அப்போல்லோ-11 என்ற விண்கலத்தில் பயணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர்தான் முதலில் நிலவில் கால் பதித்த மனிதன் என்ற பட்டத்தை பெற்றார். அன்று அவர் கூறுகையில், நான் வைப்பது சிறிய முதல் அடி, ஆனால் மனித இனத்திற்கோ அது மிக மிகப்பெரிய வெற்றிப்படி என்று கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் 2-வது முறையாக நிலவுக்கு செல்லும் 18 வீரர்களின் பெயர்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.

moon,nasa,space,usa,artemis project ,நிலவு,நாசா,விண்வெளி,அமெரிக்கா,ஆர்டெமிஸ் திட்டம்

இரண்டாவது முறையாக, நிலவுக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியில் நாசா ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக 18 விண்வெளி வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நாசா பயிற்சி அளிக்க உள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி என்பவர் உள்பட 9 ஆண் மற்றும் 9 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களை துணை அதிபர் மைக் பென்ஸ், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில், அறிமுகப்படுத்தினார்.

இதில் சில வீரர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதால் 5 வீரர்கள் மட்டுமே அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மற்றவர்களின் பெயர்களை துணை அதிபர் அறிவித்தார். ஆர்டெமிஸ் திட்டத்தை 2024ல் நிறைவேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Tags :
|
|
|
|