Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

By: Karunakaran Sat, 05 Sept 2020 2:41:17 PM

இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த அணடு இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

national best author award,47 teachers,india,ramnath govind ,தேசிய சிறந்த ஆசிரியர் விருது, 47 ஆசிரியர்கள், இந்தியா, ராம்நாத் கோவிந்த்

ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாக விருதுகளை வழங்கினார் விருது பெற்ற 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் ஆவர்.

நல்லாசிரியர் விருது பெற்றவர்களில், தமிழகத்திலிருந்து சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Tags :
|