Advertisement

நேஷனல் ஹெரால்டு வழக்கு... சோனியா காந்தி இன்று ஆஜர்

By: vaithegi Thu, 21 July 2022 07:45:14 AM

நேஷனல் ஹெரால்டு வழக்கு... சோனியா காந்தி இன்று ஆஜர்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர் வழக்கு தொடுத்தார்.

இதை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் ஒன்று அனுப்பியிருந்தது.

sonia gandhi,national herald ,சோனியா காந்தி,நேஷனல் ஹெரால்டு

ஆனால், சோனியாகாந்தி அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதன் இடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று சோனியா காந்தி இன்று ஆஜராகிறார். இந்நிலையில், சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நாடுதழுவிய தர்ணாவில் ஈடுபட திட்டமிட்டுள்ளது என அக்கட்சி தரப்பில் தெரிவித்துள்ளது.

Tags :