Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக பாஜகவின் யுவாமோர்ச்சா பிரிவு சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி

தமிழக பாஜகவின் யுவாமோர்ச்சா பிரிவு சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி

By: Nagaraj Sun, 19 Mar 2023 9:36:37 PM

தமிழக பாஜகவின் யுவாமோர்ச்சா பிரிவு சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி

புதுடில்லி: இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி... தமிழக பா.ஜ.க.வின் ‘யுவா மோர்ச்சா’ பிரிவு சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி மூலம் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது;- “பிரதமர் மோடி இந்திய அரசியல் கலாசாரத்தை மாற்றிவிட்டார். இந்திய அரசியலில் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள மாற்றத்தை இளைஞர்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

front,india,jp natta,world, ,இந்தியா, உலகம், ஜே.பி.நட்டா, முன்னிலை

2014க்கு முன் நமது நாடு ஊழல் நிறைந்த நாடாக, கொள்கை முடங்கிய, பின்தங்கிய, மெதுவான வளர்ச்சியாக இருந்தது. இன்று நம் நாடு ஒரு பெரிய மாற்றத்தை தழுவியுள்ளது. பிரதமர் மோடியின் கீழ் இந்தியா உலகை வழிநடத்துகிறது. நமது தேசத்தின் இளைஞர்களை காணொளி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த தேசிய இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சிக்காக தேஜஸ்வி சூர்யா மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை வாழ்த்துகிறேன்.

இதன் மூலம் தேச விவகாரங்களில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த மகத்தான முயற்சியை இங்கிருந்து தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாடு வரலாறு, கலாச்சாரம் மற்றும் வளமான நிலம். பாரம்பரியம், கோவில்கள், வேதங்கள், பாரம்பரியங்கள் நிறைந்த நாடு தமிழ்நாடு, தொன்மையான மொழிக்கு பெயர் பெற்ற மாநிலம். இளைஞர்களின் ஆற்றலைச் சேர்ப்பது, மக்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் முதிர்ந்த ஜனநாயகத்தின் அங்கமாக மாறுவது நமது பொறுப்பு.” இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

Tags :
|
|
|