- வீடு›
- செய்திகள்›
- சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் ரியாவின் சகோதரருக்கு என்சிபியின் காவல்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் ரியாவின் சகோதரருக்கு என்சிபியின் காவல்
By: Karunakaran Sun, 06 Sept 2020 5:24:40 PM
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பின், அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சுஷாந்தின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் சிங் வீட்டில் பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்கரவர்த்தி மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் 9-ம் தேதி வரை என்சிபியின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஷோயிக் மற்றும் மிராண்டா இருவரும் ராஜ்புத்தின் மரண வழக்கில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முதல்முறையாக ரியா தந்தை இந்திரஜித் சக்கரவர்த்தி பேசியபோது, வாழ்த்துக்கள் இந்தியா. நீங்கள் என் மகனை கைது செய்துள்ளீர்கள். இந்த வரிசையில் அடுத்து என் மகள் இருக்கிறார் என நம்புகிறேன். அதன்பின்னர் யார் என தெரியவில்லை. நீங்கள் ஒரு நடுத்தர குடும்பத்தை திறம்பட சிதைத்துவிட்டீர்கள். ஆனால் நிச்சயமாக, எல்லாம் நீதிக்காக நடந்தால் நியாயமானது. ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளார்.
‘வாழ்த்துக்கள் இந்தியா’ என இந்திரஜித் சக்கரவர்த்தி கூறியது டுவிட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது. இந்திரஜித் சக்ரவர்த்தி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ விசாரித்தது