Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்... பாமக ராமதாஸ் கோரிக்கை

மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்... பாமக ராமதாஸ் கோரிக்கை

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:54:28 AM

மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்... பாமக ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்... தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண, இருதரப்பு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என, அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

 ,இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள், பிரச்சினைக்கு தீர்வு, மாநில அரசுகள்

அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் மீதும், ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Tags :