Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தகவல்

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தகவல்

By: Nagaraj Tue, 15 Dec 2020 08:59:51 AM

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்; மத்திய அமைச்சர் தகவல்

விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார சட்டத்தையும் ரத்து செய்யக்கோரி கடந்த நவம்பர் 26 ஆம் தேதியில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டில்லியில் அமைதி வழி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் விவசாயிகள் இறங்கியுள்ளனர்.

minister of agriculture,demands,farmers,negotiations ,வேளாண் அமைச்சர், கோரிக்கைகள், விவசாயிகள், பேச்சுவார்த்தை

இந்தியாவில் ஒரு போதும் இந்த சட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என போராட்டக் களத்தில் விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய பாஜக அரசு தெரிவித்துவரும் நிலையில், ரயில் மறியல் போராட்டம், சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல விவசாயிகள் அறைகூவல் விடுத்து போராட்டத்தில் இறங்கினர்.

இந்நிலையில், விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றும், பிரதமருடன் விவசாய சங்கங்கள் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரைவில் ஏற்பாடு செய்யப்படும் எனவும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உறுதி அளித்துள்ளார்.

Tags :